Thursday, February 21, 2008

இசையில் அசத்தும் சிறுவர்கள்..!

இந்திய தொலைக்காட்சிகளில் நடாத்தப்படும் இசை சம்பந்தமான போட்டிகளில் கலந்து கொள்ளும் சிறுவர்களின் இசைத்திறமை ஆச்சரியமளிக்கின்றது. போட்டிகளில் அவர்கள் காட்டும் ஈடுபாடு, தன்னம்பிக்கை, துணிவு, உழைப்பு என்பவற்றை இப்போட்டிகளினூடாகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. பெரியவர்களே சிலவேளைகளில் தடுமாறும் பாட்டிற்கான பாவத்தை சிறுவர்கள் தமது குரலில் மிக இலகுவாகக்கையாள்கிறார்கள். பாடலில் இடையில் வரும் சங்கதிகள் அசைவுகள் முதலியவற்றை கிரகித்துப்பாடுவதில் இதற்கான அவர்களின் பயிற்சியும் உழைப்பும் தெளிவாகத்தெரிகின்றன.

நடுவர்களையே அசத்துபவையாகவும் உரியவர்களை தேர்ந்தெடுப்பதில் நெருக்கடியை ஏற்படுத்துபவையாகவும் இவர்களது பாடும்திறன் அசத்தலாகவுள்ளது. இந்தியாவில் தமிழில் மட்டுமல்லாது பிறமாநில மொழிகளிலும் இவ்வாறான போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ் மொழி தெரியாத சிறுவர்கள்கூட உச்சரிப்பு பிழைகள் இருப்பினும் இசைக்கேற்ற பாவத்தில் பாடுவதில் சிலாகிக்கவைக்கிறார்கள்.

இதன்மூலம் சிறுவர்கள் சிறுவயதிலேயே அடையாளம் காணப்பட்டு வருங்காலத்தில் அவர்கள் மேலும் மெருகேற வாய்ப்புக்கள் பிரகாசமாக அமைகின்றன. ஆயினும் சிறுவயதிலேயே இவ்வாறு புகழ்பெறுவதாலும் ஊடகங்களில் வர்த்தக மற்றும் விளம்பர நோக்கம் கருதி பெறப்பட்ட வெற்றி மிகைப்படுத்தலாக காட்டப்படுவதாலும் சுயகர்வமும், அடைவில் சுயதிருப்தியும் ஏற்பட்டு எதிர்காலத்தில் மேலும் கற்றுக்கொள்ளும் தேடலிற்கான ஆர்வத்தையும் வாய்ப்புகளையும் இழந்துவிடும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதையும் மறுக்கமுடியாது. ஆயினும் பங்கு கொள்ளும் சிறுவர்கள் வெற்றியையும் தோல்வியையும் சமமாகக்கொண்டு எதிர்காலத்தில் மேலும் தகுதிகளை வளர்த்துக்கொள்ள பெற்றோரும் ஆசிரியர்களும் உதவவேண்டும். ஏனெனில் தொலைக்காட்சிகளில் பிரமாண்டமாக வெற்றிகள் காண்பிக்கப்படும்போது தோல்விகளும் அதற்கேற்ற பிரமாண்டத்தை இயற்கையாகவே பெறுகின்றன.
(மேலும் திறமையான சிறுவர்களைக்காண கீழே பெயருடனான இணைப்புக்களில் அழுத்துங்கள்)

2 comments:

கானா பிரபா said...

இந்த வீடியோக்களை முன்னரும் பார்த்திருக்கிறேன், கலக்குகிறார்கள்

ஆ.கோகுலன் said...

வணக்கம் கானா பிரபா

இந்த passion என்று சொல்கிறார்களே. அதில்தான் ஆச்சரியம் இந்தசின்ன வயதில் மேடைகூச்சம் இல்லாமல்..

கருத்துக்கு மிக்கநன்றி.