வில்லியம் ஷேக்ஸபியரின் 'ஒத்தெல்லோ' நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்டதே 'ஓம்காரா' என்ற ஹிந்தித்திரைப்படம்.
விஷால் பரத்வாஜ் இயக்கி அவரே இசையமைத்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகக்கவனமாகக் கையாளப்பட்ட திரைக்கதையில் விஷால் பரத்வாஜிடன்
ராபின் பட், அபிஷேக் சௌபே ஆகியோரும் பங்களித்திருக்கிறார்கள்.
இயக்குநரே இசையமைப்பாளராகவும் இருப்பதால் பாடல்கள் துள்ளிசை மற்றும் மெல்லிசையாக படத்திற்கு ஏற்றவகையில் சிறப்பாக அமைந்துள்ளன.
தஸாதக் ஹீசேனின் ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக உள்ளது. பாடலில் இடம்பெறும் ஓ.. சாத்திரே... என்ற மென்மையான பாடலுக்கு மிக அருமையாக ஸ்லோமோஷனில் கமரா விளையாடியுள்ளது.
ஓமியும் டோலியும் கீழ்மாடியிலிருந்து மேல்மாடிக்கு போய், பின் மற்றொரு வழியாக மேல்மாடியிலிருந்து கீழே வந்து வெளிவாசற்கதவால் வெளியேறிச்செல்வது வரை ஒரே காட்சியாக crane shot இல் படமாக்கியிருப்பது அற்புதம்.
12 comments:
போன கிழமை டிவிடி எடுத்துக் கொண்டு வந்தேன், அதுக்குள்ள ஒரு மலையாளப்படம் வந்து குழப்பிப் போட்டுது. உங்கள் விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுது. நன்றி.
கடைசி பந்தியில் யாரையும் வச்சு காமடி கீமடி பண்ணலியே ;-)
'ஷரத் கோடொம்பே லாகேங்கே கடோர், ஷெஹ்ரோம்பே நஹி.'
எனக்கு மிகவும் பிடித்த 'உலக சினிமா' வசனங்களில் ஒன்று.
மன்னிக்கவும் அது 'லகாதேங்கே' - 'லாகேங்கே' இல்லை type. ஆசாத் அண்ணன் ஒரு ரிவ்யூ எழுதியிருந்தார் இந்தப்படத்திற்கு.
மாலை வணக்கம் கானா பிரபா மற்றும் மோகன்தாஸ்.
கருத்துகளுக்கு மிகவும் நன்றி.
கானா பிரபா said...
//உங்கள் விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுது. //
அவசரத்தில் பார்க்கவேண்டாம். ஓய்வாக இருக்கும்போது பாருங்கோ. மிகவும் இரசனையான துன்பியல் படம்.
//கடைசி பந்தியில் யாரையும் வச்சு காமடி கீமடி பண்ணலியே ;-)//
:))))
மோகன்தாஸ் said...
// ஆசாத் அண்ணன் ஒரு ரிவ்யூ எழுதியிருந்தார் இந்தப்படத்திற்கு.//
இணைப்பையும் குறிப்பிட்டிருக்கலாமே..
http://ennam.blogspot.com/2006/08/blog-post_17.html
மேலே இன்னொரு typo error, typo என்று அடிப்பதற்கு type என்று அடித்துவிட்டேன்.
வாங்கி வந்து வச்சு பார்க்காம இருக்கற படத்துல இதுவும் ஒண்ணு. கண்டிப்பா பார்த்துடறேன். விமர்சனத்துக்கு நன்றி..
//மோகன்தாஸ் said...
மேலே இன்னொரு typo error, typo என்று அடிப்பதற்கு type என்று அடித்துவிட்டேன்//
:)) ஆசாத் அண்ணரின் இணைப்பை தந்தமைக்கு மிக்க நன்றி.அவரின் விமர்சனம் கலக்கல். :)
வணக்கம் சென்ஷி..!
ஓய்வாக இருக்கும்போது மட்டும் பார்க்கவும்.நிரம்ப இரசிக்க முடியும்.
பார்த்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
மிகவும் நன்றி வருகைக்கும் பகிர்விற்கும்.
இந்தி சுத்தமாக தெரியாது. இந்தப்படத்தை ரசிக்க முடியுமா?
நமஸ்தே முரளிகண்ணன்..!,
எனக்கும் ஹிந்தி தெரியாதுதான். :)
English sub titles உள்ள டி.வி.டி யில் பார்க்கலாம்.
இந்த படம் பார்த்ததற்கு அப்புறம் தான் சைப் அலி கானுக்கு இவ்வளவு நன்றாக நடிக்க தெரியும் என்று தெரிந்து கொண்டேன்! பீடி பாட்டை பற்றி சொல்லலியே!
நன்றி பாண்டு,
உண்மைதான்.. பதிவின் நீளம் கருதி எழுதவில்லை..
மிகவும் நன்றி
Post a Comment