Sunday, March 9, 2008

தெரிந்தால் சொல்லுங்களேன்..

நடனத்தில் பலவகைகள் உண்டு. சாஸ்திரிய நடனம், கிராமிய நடனம், மேற்கத்தைய நடனம் போன்றவை அதில் சில. இந்த வகைகளிற்குள்ளும் பலவிதமான வடிவங்கள் உண்டு. உதாரணத்திற்கு பரதத்தையும் கதகளியையும் எடுத்துக்கொண்டால் ஒரே உணர்ச்சி வெளிப்பாட்டை அல்லது செய்தியை இரு நாட்டிய முறையிலும் வெளிப்படுத்தும் விதம் வேறுவேறானதாகும். நடனமூலமாகவே செய்திகள் தெரிவிக்கும் அளவிற்கு நடனவடிவங்கள் நுணுக்கம் வாய்ந்தவை. இவற்றை பரிச்சயம் வாய்ந்தவர்களுடன் இருந்தே இரசிக்க முடியும். சர்வதேச நடன அரங்குகளில் ஆடப்படும் பல்வேறு நாட்டையும் சோந்த ஆடல்வடிவங்கள் பலசமயங்களில் என்னைப்போன்றவர்களிற்கு புரியாதுவிட்டாலும் அதற்கான ஒத்திகைகளும் பின்னணிகளும் பணச்செலவுகளும் அந்த நடனங்களின் பெறுமதி குறித்தே மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணரமுடிகிறது.
அந்தவகையில் இந்த நடனமும் எனக்கு பிடித்துப்போனது. பொறுமையாக! பலமுறை பார்த்தபோதும் எதனால் பிடித்தது என்பதை உணரமுடியவில்லை. இந்நடனம் ஒரு செய்தியை சொல்ல முற்படுகிறது என்பதை உணரமுடிந்தாலும் அது என்ன என்பதை உணரமுடியவில்லை. பாடல் பரிச்சயமான இசைஞானியின் நல்ல பாடல்தான். ஆனால் அதன் மூலம் சொல்லவருவது என்ன..? இதில் பங்கேற்றோர் உண்மையில் குருடர்களா..? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...


4 comments:

david santos said...

Thanks for your posting and have a good day.

ஆ.கோகுலன் said...

Thank you Mr.David Santos.

Illatharasi said...

நானும் ரசித்தேன், பாடலையும், நடனத்தையும். மனதுக்கு இதமாக இருக்கிறது.

ஆ.கோகுலன் said...

வருக இல்லத்தரசி! கருத்துக்கு மிக்க நன்றி.